சமையலில் சிறு சிறு குறிப்புகளை நாம் தெரிந்து வைத்திருந்தால் ரொம்பவே உபயோகமாக இருக்கும். மேலும் சாதாரண சமையலைக் கூட ரொம்பவே வித்தியாசமான முறையில் மாற்றி அமைக்கக் கூடிய குறிப்புகள் தெரிந்து வைத்திருந்தால் நாமும் சமையல் கில்லாடி ஆகிவிடலாம். எல்லோரும் சமைக்கும் சமையலில் கொஞ்சம் வித்தியாசத்தை புகுத்துவது எப்படி? என்பதைத் தான் இந்தக் குறிப்புகளின் மூலம் காண இருக்கிறோம்.
பஜ்ஜி போடும் பொழுது கடலை மாவு பயன்படுத்துவோம் ஆனால் அதற்கு பதிலாக ஒரு கைப்பிடி பச்சரிசி, ஒரு கைப்பிடி பச்சை பருப்பு எடுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து உப்பு, காரம் சேர்த்துபஜ்ஜி போட்டால் வித்தியாசமான சுவையுடன் சூப்பராக இருக்கும்.
சமையல் குறிப்புக்கள்
1.
குடற்புண் ஆறுவதற்கு அடிக்கடி வாழைப்பூவை சமைத்து சாப்பிடலாம். அப்படி வாழைப்பூவை நீங்கள் பொரியல் செய்ய நறுக்கும் பொழுது அதனுடன் கொஞ்சம் முருங்கைக் கீரையை சுத்தம் செய்து சேர்த்து வதக்கி சாப்பிட்டால் குடல் புண் விரைவில் ஆறும்.
2.சுண்டைக்காய் வத்தல், மணத்தக்காளி வத்தல் என்று வத்தல் குழம்பு செய்யும் பொழுது அதனை அடுப்பிலிருந்து இறக்கியதும் கொஞ்சம் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப் சேர்த்து பாருங்கள், ருசி அபாரமாக இருக்கும்.